அக்காவின் மறைவு செய்தி கேட்டு விமான நிலையத்திலேயே கதறி அழுத ஒலிம்பிக் நாயகி…!

Published by
Rebekal

அக்காவின் மறைவு செய்தி கேட்டு ஒலிம்பிக் நாயகி தனலெட்சிமி விமான நிலையத்திலேயே கதறி அழுதுள்ளார்.

ஒலிம்பிக் தகுதி சுற்றில் தமிழக வீராங்கனை தனலட்சுமி பந்தய தூரத்தை மிக குறைவான நேரத்தில் கடந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால், போட்டிக்கு தயாராகவும், டோக்கியோ புறப்படுவதற்காகவும் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவிலேயே தனலட்சுமி தங்கியிருந்தார். அங்கிருந்து டோக்கியோ புறப்பட்டு சென்றார். இதற்கிடையில் கடந்த 12-ம் தேதி தனலட்சுமி மூத்த  சகோதரி நெஞ்சு வலியால் உயிரிழந்தார்.

தனலட்சுமி சகோதரி உயிரிழந்த செய்தியை அவரிடம் சொன்னால் அவரது கவனம் சிதறிவிடும் என்பதற்காக அவரது குடும்பத்தினர் சகோதரி இறந்ததை தனலெட்சுமியிடம் மறைத்துள்ளனர். இந்நிலையில், ஒலிம்பிக் தடகள போட்டியில் பங்கேற்க சென்றிருந்த ஒலிம்பிக் நாயகி தனலட்சுமி திருச்சி விமான நிலையம் வந்த அப்பொழுது அவருக்கு ஆரவாரமாக மாலை அணிவித்து, மரியாதை கொடுக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.

விமான நிலையத்தில் தனலட்சுமியிடம் அவரது சகோதரி இறந்துவிட்ட செய்தியை உறவினர் ஒருவர் தெரிவித்தார். உடனடியாக  துக்கம் தாங்கமுடியாமல் விமான நிலையத்திலேயே மண்டியிட்டு கதறி தனலெட்சுமி அழுதுள்ளார். இது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. அதன் பின் அவரது உறவினர்கள் அவரை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர். இது குறித்து தனலட்சுமி கூறுகையில், தனது சகோதரி தனக்கு என்று வாழாமல் தனக்காக வாழ்ந்தவர் எனவும், தான் நன்றாக இருக்க வேண்டும் என நினைத்தவர் அக்கா எனவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

23 minutes ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

2 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

4 hours ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

5 hours ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

6 hours ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

7 hours ago