சட்டமன்றத்தில் பாஜகவினரை அமர வைப்பது மட்டுமே ஒரே இலக்காக இருக்க வேண்டும்- எல்.முருகன் பேச்சு .!

Published by
murugan

சட்டமன்றத்தில் பாஜகவினரை அமர வைப்பது மட்டுமே ஒரே இலக்காக இருக்க வேண்டும் என பாஜக அரசு தொடர்பு அணியின் செயற்குழுக் கூட்டத்தில் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன்  தெரிவித்துள்ளார்.

இன்று நாடு முழுவதும் 72-வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, சென்னையில் உள்ள பாஜகவின் தலைமையகமான கமலாயத்தில்  தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தேசியக்கொடி ஏற்றி பாரத மாதா சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில துணைத்தலைவர் துரைசாமி மற்றும் நடிகை குஷ்பூ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற பாஜக அரசு தொடர்பு அணியின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் பேசிய பாஜக தமிழக தலைவர் எல்.முருகன், தேர்தல் நேரத்தில் மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தான் பாஜக அரசு தொடர்பு அணியின் முக்கிய பணி, தேர்தல் நேரத்தில் கட்சியும் சிறிய தவறு செய்தாலும் அது பெரிதாக பேசப்படும் என கூறினார்.

மேலும் மத்திய அரசு தமிழகத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் சட்டமன்றத்தில் பாஜகவினரை அமர வைப்பது மட்டுமே ஒரே இலக்காக இருக்க வேண்டும் என கூறினார்.

Published by
murugan

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

8 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

11 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago