பவானிசாகர் அணை பகுதியில் உள்ள பூங்கா 31-ம் தேதி வரை மூடல்.!

கொரோனா வைரஸ் தற்போது உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது.  இந்தியாவில் பரவ தொடங்கி கொரோனா வைரசால் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 93 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தற்போது உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது.  இந்தியாவில் பரவ தொடங்கி கொரோனா வைரசால் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 93 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மத்திய , மாநில அரசு கொரோனோ வைரஸை தடுக்க தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில்  கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக ஈரோடு மாவட்டத்தில்  பவானிசாகர் அணை பகுதியில் உள்ள பூங்கா வருகின்ற 31-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளது.

இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்  தமிழக மக்கள் தேவையின்றி வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவித்துள்ளார். மேலும் பொதுஇடங்களில் அதிகளவில் கூடுவதை அடுத்த 15 நாட்களுக்கு தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும் வருகின்ற மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது எனப்து குறிப்பிடத்தக்கது.