ஊரடங்கிற்கு பின் தொற்று பரவல் குறைந்து வருகிறது – ராதாகிருஷ்ணன்

The curfew has been enforced on the orders of the Chief Minister without any harm to the people. Health Secretary Radhakrishnan has asked the people to take full advantage of the curfew and stay safe.

முதல்வர் உத்தரவின் பேரில் மக்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கை மக்கள் முழுமையாக பயன்படுத்தி பாதுகாப்புடன் இருக்குமாறு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அடை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தை பொறுத்தவரையில், சமீப நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வந்ததையடுத்து, இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இதனை அடுத்து சென்னை பெரிய நகர், புறநகர் மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய  இராதாகிருஷ்ணன் அவர்கள், இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.  மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் படிப்படியாக அதிகரித்து வந்தது. இருப்பினும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.

எனவே பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் மக்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கை மக்கள் முழுமையாக பயன்படுத்தி பாதுகாப்புடன் இருக்குமாறும், கூட்டம் சேராமல் தடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், கொரோனா தொற்றை குறைக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். மக்கள் லேசான அறிகுறிகள் ஏற்பட்டாலும் பரிசோதனை செய்து தங்கள் உடனடியாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.