இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் இந்தியா வெளிநடப்பு செய்திருந்தது தமிழர்களுக்கு செய்த துரோகம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு செய்யூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அக்கட்சி தலைவர் திருமாவளவன், முள்ளிவாய்க்கால் ஈழ இனப்படுகொலைக்கு காரணமான ராஜபக்சேவை சர்வதேச குற்ற புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்தப்படும் வகையில் சர்வதேச குற்றவாளி கூண்டில் நிறுத்துவதற்கு ஆதரவான தீர்மானத்திற்கு இந்தியா வாக்களித்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த கும்பல் ராஜபக்சேவை காப்பற்றுவதற்காக, இலங்கை அரசுக்கு ஆதரவாக, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் கொண்டுவந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்காமல், இந்தியா புறக்கணிப்பு செய்திருக்கிறது. இதுதான் பாஜக தெரிந்துகொள்ளுங்கள் என்று கூறி, இந்தியாவின் வெளிநடப்பு தமிழர்களுக்கு செய்த துரோகம் என்றும் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நேற்று இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் நிறைவேறியது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை 22 நாடுகள் ஆதரித்தும், 11 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்திருந்தது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா, நேபாளம், ஜப்பான், இந்தோனோஷியா உள்ளிட்ட 14 நாடுகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…