திரையரங்குகளை திறக்க பரிந்துரை செய்யுமாறு அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை…!

Default Image

திரையரங்குகளை திறக்க பரிந்துரை செய்யுமாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் தளங்களுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்தாலும், 110 நாட்களாக திரையரங்குகள் திறக்கப்படாமல் காணப்படுகிறது. இதனை அடுத்து, திரையரங்குகளை திறக்க பரிந்துரை செய்யுமாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், திரையரங்குகளில் பின்பற்ற திட்டமிட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai