தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் மதுபான விற்பனை மூலம் ரூ.28,839 கோடி வருவாய் வந்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மதுவிலக்கு கொள்கை விளக்கக் குறிப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், 2019-20 நிதியாண்டில் வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பீர் ஏற்றுமதி செய்யப்பட்டதன் மூலம் 3 கோடியே 39 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றம் இல்லை எனவும் உச்சநீதிமன்றம் கூறியதால் தான் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மூடப்பட்ட கடைகளுக்கு, மாற்று ஏற்பாடாக வேறு இடத்தில் மீண்டும் திறக்கப்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் டாஸ்மாக் மதுபாட்டிலில் இடம்பெற்று இருந்த, மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு என்ற வார்த்தை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை கொள்கை விளக்கக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…