தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! மாநில அரசு அதிரடி உத்தரவு..!

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

TNGovt

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் வழக்கமான நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில், எரிசக்தித் துறையின் அரசாங்க முதன்மைச் செயலாளராக பீலா ராஜேஷ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச் செயலர் ரமேஷ் சந்த் மீனா மாற்றம் செய்யப்பட்டு சிறப்பு முயற்சிகள் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் பட்டு வளர்ப்பு இயக்குநர் ஜே. விஜயா ராணி இடமாற்றம் செய்யப்பட்டு, கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராக மாற்றப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் நிர்வாக இயக்குநரான எம். ஆசியா மரியம், ஐஏஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டு சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரசு, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் இணைச் செயலாளர் சந்திர சேகர் சகாமுரி, சேலம் மாவட்டம் பட்டு வளர்ப்பு இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சிறுதொழில் கழகத்தின் முதன்மைச் செயலாளர்/தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்.எஸ்.விஜயகுமார், தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிச் சேவைகள் லிமிடெட் அதன் முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் பல துறைகளில் பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

unknown node