திருநங்கை காவலருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதால், அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தேனி மாவட்டத்தில் வாசிக்க கூடிய சம்யுக்தா எனும் திருநங்கை காவலருக்கு படித்து முடித்துவிட்டு முன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக திருவெறும்பூர் அருகே நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் உள்ள பெண் காவலர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் இந்த பயிற்சியின் போது கல்லூரி முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் திருநங்கை காவலருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனால் வேதனை அடைந்த திருநங்கை காவலர் டிஐஜியிடம் செல்போன் மூலம் புகார் அளித்துள்ளார். புகார் அளித்ததைத் தொடர்ந்து கல்லூரி சப்-இன்ஸ்பெக்டர் திருநங்கையிடம் தகராறு செய்துள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான திருநங்கை நேற்று காலை விஷம் குடித்துள்ளார். இந்நிலையில் இதற்கு காரணமான கல்லூரி முதல்வர் முத்துக்கருப்பன் மற்றும் துணை முதல்வர் மனோகரன் ஆகியோர் மீது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது குறித்து திருநங்கை கூறுகையில், தற்கொலை முயற்சியில் ஈடுபட இவர்களின் பாலியல் தொந்தரவு தான் காரணம் எனவும், வேறு எந்த ஒரு தனிப்பட்ட காரணமும் இல்லை எனவும் கூறியுள்ளார். தற்போது திருநங்கை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…