காவலருக்கு கன்னத்தில் அறைந்த லாரி ஓட்டுநர்…! கைது செய்த போலீசார்…!

போக்குவரத்து காவலரை கன்னத்தில் அறைந்த லாரி ஓட்டுனரை கைது செய்த போலீசார்.
சென்னை போரூர் அருகே தவறான பாதையில் வந்ததால் போக்குவரத்து காவலர் ஒருவர் வெளிமாநில லாரி ஓட்டுனர், முஸ்தாக் அகமது என்பவரை மாற்று சாலையில் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனால் போக்குவரத்து காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முகமது, ஒரு கட்டத்தில் காவலரை கன்னத்தில் அறைந்துள்ளார்.
மேலும், முஸ்தாக் அகமது தான் கையில் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதுகுறித்து போக்குவரத்து காவலர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் லாரி ஓட்டுனர் முஸ்தாக் அகமது கைது செய்து அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தாக்கியது ஆபாசமாக பேசியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025