வேளாங்கண்ணி பேராலய விழா – பக்தர்களுக்கு அனுமதி இல்லை!!

The Collector has ordered that devotees should not be allowed in the annual festival of the Velankanni Health Mother Cathedral.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என ஆட்சியர் உத்தரவு.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஆகஸ்ட் 29ம் தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை அனைத்து நிகழ்ச்சிகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் வேளாங்கண்ணி பேரூராட்சிக்கு உட்பட்ட தாங்கும் விடுதி ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை திறக்கப்படாது என்றும் திருவிழாவை முன்னிட்டு தற்காலிக கடைகள் அமைக்கவும், உணவகங்கள் அமைக்கவும் தடை விதிக்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.