50 ஆயிரம் செலவில் சரிந்த ஆலமரத்தை உயிர்ப்பித்த கிராமமக்கள்! காரணம் என்ன?

Default Image

கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் நாகை மற்றும் கடலூர் மாவட்டங்கள் மிகப்பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்தது. பல மனிதர்களின் உயிரை காவு வாங்கிய கஜா புயல், மரங்களை  மட்டும் விட்டு வைக்குமா?

இந்நிலையில், வேதாரண்யம் அருகே உள்ள மறையநல்லூர் உச்சகட்டளையில் உள்ள இருநூறு ஆண்டுகள் பழைமையான ஆலமரம் வேரோடு சாய்ந்தது. இந்த ஆலமரம் தான் அந்த கிராமத்தின் அடையாளமாகவே இருந்துள்ளது.

இதனையடுத்து, இந்த பழைமையான ஆலமரத்தை மீட்டெடுப்பதற்காக, அந்த கிராம மக்கள் தங்களது சொந்த செலவில் இரண்டு கிரேன்கள், ஒரு பொக்லைன் மூலம் ஆலமரத்தை நிமிர்த்தி , மண்ணில் நட்டு வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணி சுமார் 12 மணி நேரம் நடைபெற்றுள்ளது. இந்த மரத்தை உயிர்ப்பிக்க சுமார் 50 ஆயிரம் செலவு செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai