விஸ்வநாதன் ஆனந்தின் தந்தை மறைவுக்கு மு.க. ஸ்டாலின் இரங்கல்..!

Default Image
விஸ்வநாதன் ஆனந்த் தந்தை கே.விஸ்வநாதன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலக செஸ் போட்டிகளில் ஐந்துமுறை சாம்பியன் பட்டம் பெற்ற ‘கிராண்ட் மாஸ்டர்’  விஸ்வநாதன் ஆனந்த் தந்தையார் விஸ்வநாதன் அவர்கள் மறைவையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று உலக அரங்கில் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த ‘கிராண்ட் மாஸ்டர்’ விஸ்வநாதன் ஆனந்த் அவர்களின் தந்தை கே.விஸ்வநாதன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
அவரது பிரிவால் வாடும் விஸ்வநாதன் ஆனந்த், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்