மாணவர்கள் தொட்டுவிடும் தொலைவில் போதை.. விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி என்ன பயன்? – ராமதாஸ்

Published by
பாலா கலியமூர்த்தி

மது மற்றும் போதை பழக்கத்தில் இருந்து மாணவர்களை விடுவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்.

தெருவுக்கு தெரு மதுக்கடைகளை திறந்து மாணவர்கள் தொட்டுவிடும் தொலைவில் போதையை வைத்து விட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி என்ன பயன் விளையும்? என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மது மற்றும் போதை பழக்கத்தில் இருந்து மாணவர்களை விடுவிக்க வேண்டும். மது அருந்துவதும் போதையில் வன்முறையில் ஈடுபடுவதும் தான் சாகசம் என்ற தவறான எண்ணம் மாணவர்கள் மனதில் விதைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் ஆசிரியர்களைத் தாக்க முனைதல், பொது இடங்களில் மோதலில் ஈடுபடுதல், மது அருந்தி வன்முறையில் ஈடுபடுதல் உள்ளிட்ட மாணவர்களின் செயல்பாடுகள் சமுதாய நலனில் அக்கறை கொண்டவர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

மாணவர்கள் தவறான வழியில் செல்வதற்கு சமூக சூழலும் சமூகநல நோக்கமற்ற திரைப்படங்களுமே காரணம். மாணவர்கள் குடிப்பதையும் அதற்கு அடிமையாவதையும் சாத்தியமாக்குவது ஆங்காங்கே உள்ள மதுக்கடைகள் தான். மதுக்கடைகளை மூடாமல் மாணவர்கள் போதைக்கு அடிமையாகாமல் தடுப்பது சாத்தியமற்ற செயல். மாணவர்களை நல்வழிப்படுத்த கல்வி, கலை, இலக்கியம், விளையாட்டு போன்றவற்றில் கவனத்தை திருப்ப அரசு திட்டம் தீட்ட வேண்டும். மது, புகை, கஞ்சா உள்ளிட்ட பொருட்களுக்கு மத்தியில் வாழும் மாணவர்களிடம் மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு பரப்புரை செய்யும் போது அதனால் எந்த பயனும் ஏற்படாது, அரசு எதிர்பார்க்கும் பயனை இது தராது.

அதேபோல், பள்ளி வளாகங்களுக்கு மிக அருகில் சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் நேரடியாகவும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மறைமுகமாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. போதைப்பொருட்களுக்கு மாணவர்கள் அடிமையாகாமல் விழிப்புணர்வு ஊட்டும் அரசின் நோக்கம் போற்றத்தக்கது என்று தெரிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ்,மதுக்கடைகளை மூடி மாணவ சமுதாயத்தை காப்பாற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஆபரேஷன் சிந்து: ஈரானை தொடர்ந்து இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு.!

ஆபரேஷன் சிந்து: ஈரானை தொடர்ந்து இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு.!

இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…

24 minutes ago

வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.., ”இது வெறும் கீறல்தான்”- எலான் மஸ்க் பதிவு.!

டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…

52 minutes ago

ஜூன் 24, 25ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…

1 hour ago

அணு உலை தகர்ப்புக்கு பதிலடி.., இஸ்ரேலின் முக்கிய இடங்களை தாக்கிய ஈரான்.!

மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…

1 hour ago

லாரி ஏறி பள்ளி சிறுமி பலி – கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்த காவல் ஆணையர்.!

சென்னை : சென்னை பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் தாயுடன் பள்ளிக்கு சென்ற போது தண்ணீர் லாரி மோதி சௌமியா என்கிற…

2 hours ago

கைலாசா எங்கே? நித்தியானந்தா எங்கே? மதுரை கிளை சரமாரி கேள்வி.! நித்யானந்தா சீடர்கள் அளித்த பதில்.!

மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது…

2 hours ago