திமுக வெற்றி பெற்றால் அதிமுக என்ன செய்வார்கள், ரோட்ல கூட நிற்க முடியாது – டிடிவி தினகரன்

Published by
பாலா கலியமூர்த்தி

வரும் தேர்தலில் அமமுக இடம்பெறும் அணியே முதல் அணியாக இருக்கும் என்று அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சை ஒரத்தநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தீய சக்தியான திமுகவை ஆட்சிக்கு வர விடக்கூடாது என்பதற்காக நாங்கள் போராடி வருகிறோம். எங்களுக்கு மடியில் கனமில்லை, தப்பித்தவறி திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக எங்கே இருக்கும், என்ன செய்வார்கள். நாங்கல்லாம் ரோட்ல கூட இருப்போம். ஆனால், அவர்கள் ரோட்ல கூட நிற்க முடியாது. எல்லாரும் எங்கே கிடைப்பிங்கனு தெரியும் என்று கூறியுள்ளார்.

மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் சசிகலா போட்டியிடுவது குறித்து சட்டரீதியாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதில் வெற்றி கிடைத்தால் கண்டிப்பாக அவர் போட்டியிடுவார் எனவும் தெரிவித்துள்ளார். சசிகலா போட்டியிட வேண்டும் என்ற ஆர்வத்தில் நான் இருக்கிறேன். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அம்மாவின் தொண்டர்கள் இருப்பது தான் தமிழகத்தில் முதல் அணியாக இருக்கும். வரும் தேர்தலில் அமமுக இடம்பெறும் அணியே முதல் அணி என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் அம்மாவின் உண்மையான ஆட்சி வரவேண்டும் என்றால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது மக்களுக்கு தெரியும். அதன் வெளிப்பாடுதான் 4 ஆண்டு காலம் பழிச்சொல்லுக்கு பின்னர் வந்த சசிகலா அவர்களுக்கு அளித்தே வரவேற்பே காரணம். தற்போது மருத்துவர்கள் சசிகலாவை ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளனர். ஓய்வு முடிந்த பிறகு சசிகலா வருவார். நாங்கள் நிச்சியம் அம்மாவின் இயக்கத்தை மீட்டெடுப்போம் என கூறியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

2 minutes ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

1 hour ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

2 hours ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

2 hours ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

2 hours ago

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

3 hours ago