திருச்செந்தூரில் நேற்று மாலை சசிகலாவை தேனி மாவட்ட ஆவின் தலைவரும், ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரருமான ஓ.ராஜா நேரில் சந்தித்து பேசிய நிலையில் ஓ.ராஜா கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஓ.ராஜா, நான் என்ன முதல்வர் மு.க.ஸ்டாலினையா சந்தித்தேன்..? அதிமுகவுக்கு சசிகலா தலைமைதான் தேவை. அதிமுகவை சசிகலாதான் தலைமையேற்று நடத்த வேண்டும்.
என் விருப்பப்படிதான் சசிகலாவை சந்தித்தேன். சசிகலா சந்திப்பு பற்றி அண்ணன் ஓபிஎஸ்ஸிடம் தெரிவிக்கவில்லை. அதிமுக தரைமட்டத்திற்க்கு வந்துவிட்டது. கட்சியின் தலைவர்கள் தொண்டர்களை பற்றி நினைப்பதேயில்லை. இரட்டைத்தலமை இரட்டைக்குழல் துப்பாக்கி அல்ல தீபாவளி துப்பாக்கி. தேர்தல் தோல்விக்கு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தான் காரணம்.
அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் கருத்தாக உள்ளது. என்னை கட்சியை விட்டு நீக்க இவர்கள் யார்..? எனக்கு சசிகலா தான் பொதுச்செயலாளர் என தெரிவித்தார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…