பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் 25 பேர் காயம்..!

25 people have been injured in a grenade attack on a market near a police station in the Pakistani Pakistani city of Rawalpindi

பாகிஸ்தானின் காரிஸன் நகரமான ராவல்பிண்டியில் உள்ள ஒரு காவல் நிலையம் அருகே சந்தையில் ஏற்பட்ட கையெறி குண்டு தங்குதலில் 25 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் 22 பேர் மாவட்ட தலைமையக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், மேலும் 3 பேருக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டதாகவும் மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையெடுத்து, சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்ற போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் பணியைத் தொடங்கினர். இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் பொறுப்பேற்கவில்லை. டிசம்பர் 4 ஆம் தேதி பிர் வாதாய் காவல் நிலையம் அருகே நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார்.

7 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் நடந்த 10 நாட்களில் காவல் நிலையம் அருகே நடந்த இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.