3 ஏக்கர் நிலம் ரூ.2,238 கோடிக்கு ஏலம்! ஜப்பான் நிறுவனத்தின் அதிரடி செயல்!

ஜப்பான் நாட்டின் பாரம்பரியமிக்க தொழில் குழுமமான சுமிட்டோமோ குழுமத்திற்கு கீழ் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனம் இந்தியாவில் தனது வர்த்தகத்தை நிறுவ திட்டமிட்டுள்ள நிலையில், மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா என்ற தொழிற்பூங்காவிற்கு அருகிலுள்ள 3 ஏக்கர் நிலத்தை மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளது.
மும்பை பாந்த்ரா குர்லா தொழிற்பூங்காவில், ஜியோ கார்டன் அருகே உள்ள 3 ஏக்கர் நிலத்தை ஏக்கர் ஒன்றுக்கு 745 கோடி ரூபாய் வீதம், 3 ஏக்கர் நிலத்தை, 2,238 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்க முன் வந்துள்ளது. இதனை மும்பை பெருநகர மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளும் பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது ஏற்கப்பட்டால், இதுவரை இந்தியாவில் இல்லாத அதிகபட்ச நில ஏல நடவடிக்கையாக இருக்கும். மேலும், மும்பை வடாலாவில் ஏக்கர் ஒன்று 653 கோடி ரூபாய் என்ற விலையில், 6.2 ஏக்கர் நிலத்தை 4 ஆயிரத்து 50 கோடிக்கு வாங்கியது தான் அதிகபட்ச தொகையில் எடுக்கப்பட்ட நில ஏலம் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025