கனடா அரசு தங்களது வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து நான்காவது நாளாக தரைப்படை,பீரங்கி டாங்கிகள் கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உக்ரைன் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலர் நாட்டை விட்டு வேறு நாட்களுக்குள் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
இந்நிலையில், ரஷ்யாவின் இந்த செயலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ரஷ்யாவிற்கு எதிரான தடைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கனடா அரசு தங்களது வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளது. முன்னதாக, ஜெர்மனி, இத்தாலி, டென்மார்க், அயர்லாந்து போன்ற நாடுகள் தங்களது வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.