கொரோனா வைரஸ் மக்களின் வாழ்வாதாரங்களை தாக்கியுள்ளது : உலக சுகாதார நிறுவனம்

கொரோனா தொற்றுநோய் மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் தாக்கியுள்ளது.

கொரோனா தொற்றுநோய் மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் தாக்கியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், WHO இன் இயக்குநர் பூனம் கேத்ரபால் சிங் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் தாக்கியுள்ளதுடன், அவர்களில் பயம் மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், உலகளாவிய தற்கொலை இறப்பு புள்ளிவிவரங்களில் தென்கிழக்கு ஆசியாவில் 39 சதவீதம் உள்ளது என்றும், கோவிட் -19 தொற்றுநோய் இன்னும் பல வழிகளில் மக்களை தற்கொலைக்கு ஊக்குவிக்கிறது. ஆசியா பிராந்தியத்தில் உள்ள நாடுகள் மனநலம் மற்றும் தற்கொலை தடுப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.