கார்வெட் ஏவுகணை INS கிர்பான்… வியட்நாமுக்கு இந்தியா பரிசு… ராஜ்நாத் சிங்.!

INS Kirpan

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்வெட் ஏவுகணை INS கிர்பானை, வியட்நாமுக்கு இந்தியா பரிசாக அளித்துள்ளது.

வியட்நாமின் கடற்படைத் திறனை மேம்படுத்தும் வகையில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் கிர்பான் என்ற ஏவுகணையை வியட்நாமுக்கு இந்தியா பரிசாக வழங்கியுள்ளதாக பாதுகாப்புதுறை  அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மற்றும் வியட்நாம் பாதுகாப்பு அமைச்சர்  ஃபான் வான் கேங் இருவரும் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகள் முன்னேற்றம் பற்றியும் பேசப்பட்டது. இரு நாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான மைல்கல்லாக, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சேவையில் இருக்கும் கார்வெட் ஏவுகணை INS கிர்பானை வியட்நாமுக்கு பரிசளிப்பதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்