டெல்லியில் அரங்கேறி வன்முறை சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் ஒரு பதிவை பதிவிட்டு உள்ளார்.அதில் “வெறுப்பு அடிப்படையிலான இனவாத சித்தாந்தங்கள் தலைதூக்கினால், அது ரத்தம் சிந்துதலையே ஏற்படுத்தும். என கூறினார்.
unknown nodeமேலும் அவர் “பாகிஸ்தானில் நமது முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினரையோ அவர்களது வழிபாட்டு தலங்களையோ யாரும் தாக்கினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். நமது சிறுபான்மையினரும் சமமான குடிமக்களே என்று கூறினார்.
டெல்லி நடந்த வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34-ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த வன்முறையில் காயமடைந்த 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.