#Breaking : துருக்கி, சிரியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! 6.3 ரிக்டர் அளவில் பதிவு..!

துருக்கி, சிரியாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

துருக்கி, சிரியாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

துருக்கி மற்றும் சிரியா எல்லைப் பகுதியில் இரண்டு வாரங்களுக்கு பிறகு  மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் 6.3 ரிக்டர் அளவில் பதிவானதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு இஸ்ரேலிலும் உணரப்பட்டது.

கடந்த பிப்ரவரி 6 அன்று, துருக்கி மற்றும் சிரியாவில் 7.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த  நிலநடுக்கம் ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து மேலும் பல அதிர்வுகள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47,000ஐ தாண்டியுள்ளது.

unknown node