துருக்கி அதிபராக எர்டோகன் மீண்டும் தேர்வு...பிரதமர் மோடி வாழ்த்து.!

துருக்கி அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள எர்டோகனுக்கு, பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

PMModi TurkeyPrezCongratulate

துருக்கி அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள எர்டோகனுக்கு, பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

துருக்கியின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரெசெப் தையிப் எர்டோகனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் எர்டோகன் 52% வாக்குகளையும், தன்னை எதிர்த்து போட்டியிட்ட கெமல் கிலிக்டரோக்லு 48% வாக்குகளையும் பெற்றனர். அதிக பணவீக்கம் மற்றும் நாட்டில் ஏற்பட்ட பூகம்பம் இவற்றிற்கு பிறகு மீண்டும் அதிபராக எர்டோகன் தனது ஆட்சியை தொடர இருக்கிறார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது வாழ்த்து ட்வீட்டில், எங்கள் (இந்தியா-துருக்கி) இருதரப்பு நாடுகளின் உறவுகள் மற்றும் உலகளாவிய பிரச்சினைகளிலும் இரு நாடுகளின் ஒத்துழைப்பு, இனி வரும் காலங்களில் தொடர்ந்து வளரும் என்று நான் நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

unknown node