வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள இஸ்கான் ராதாகாந்தா கோவில் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஹிந்து அமெரிக்கன் அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இஸ்கான் ராதாகாந்தா கோவில் மீது தாக்குதலை நேற்று இரவு 8 மணிக்கு ஹாஜி ஷஃபியுல்லா தலைமையில் 150 பேர் தாக்கி உள்ளனர். கோயில் சிலைகள் பணம் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களைக் கொள்ளையடித்தனர். இந்த தாக்குதலின் போது குறைந்தது 3 இந்து பக்தர்கள் காயமடைந்தனர்” என கூறப்பட்டுள்ளது.
unknown nodeகோவில்கள் மீது ஏற்கனவே தாக்குதல்கள் நடந்துள்ளன
வங்கதேசத்தில் இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு, நவராத்திரியின் போது பல கோவில்களும் தாக்கப்பட்டன. இந்த வன்முறையில் 2 இந்துக்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். அப்போதும் டாக்காவில் உள்ள இஸ்கான் கோவில் தாக்கப்பட்டது.
9 ஆண்டுகளில் 4000 தாக்குதல்கள்:
கடந்த 9 ஆண்டுகளில் வங்கதேசத்தில் இந்துக்கள் மீது சுமார் 4000 தாக்குதல்கள் நடந்துள்ளன. இவற்றில் 1678 மத விஷயங்கள் மட்டுமே.