ரஷ்ய போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மனிதாபிமான உதவி இணையதளம் அறிமுகம்..!

ரஷ்ய தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வண்ணம், ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் அலுவலகம் மனிதாபிமான உதவி இணையதளத்தைத் தொடங்கியுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் போர்
கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யா உக்ரைனில் பல முக்கிய நகரங்களை கைப்பற்றி உள்ளது. மேலும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உக்ரேனில் இருந்து அகதிகளாக பிற நாடுகளுக்கு சென்றுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
தொடரும் தாக்குதல்
இந்த தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில் பலர் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும் ரஷ்யா தனது தாக்குதலை நிறுத்திய பாடில்லை. உலகநாடுகள் ரஷ்யாவிடம் தாக்குதலை நிறுத்துமாறு அறிவுறுத்தி வரும் நிலையில் அதற்கு செவி சாய்க்காமல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
மனிதாபிமான உதவி இணையதளம்
இந்நிலையில், ரஷ்ய தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வண்ணம், ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் அலுவலகம் மனிதாபிமான உதவி இணையதளத்தைத் தொடங்கியுள்ளது. உக்ரைனின் உள்ளூர் ஊடகமான தி கிய்வ் இன்டிபென்டன்ட், “ஜனாதிபதியின் அலுவலகம் மனிதாபிமான உதவி இணையதளத்தை அறிமுகப்படுத்துகிறது. அதிகாரப்பூர்வ இணையதளமான http://help.gov.ua மனிதாபிமான உதவியை எப்படி அனுப்புவது மற்றும் யாருக்கு அனுப்புவது என்பதைக் கண்டறிய உதவுகிறது. போர்டல் தொடர்புகளையும் வழங்குகிறது என தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025