அதிகரிக்கும் கொரோனா.. இந்தியா வரும் ஜப்பான் பிரதமரின் பயணம் ஒத்திவைப்பு!

Japan's Prime Minister Yoshihide Suga's tour of India and the Philippines has been postponed due to the spread of corona in Japan.

ஜப்பானில் கொரோனா பரவல் காரணமாக அந்நாட்டு பிரதமர் யோஷிஹைட் சுகாவின் இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் சுற்றுப்பயணம் தள்ளிவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 2.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,023 பேர் உயிரிழந்துள்ளனர். அந்தவகையில், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா இம்மாத இறுதியில் இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் சுற்றுப்பயணம் திட்டமிட்டுள்ளார்.

அண்மையில் அமெரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜப்பான் பிரதமர், தற்பொழுது இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் சுற்றுப்பயணம் திட்டமிட்டுள்ளார். ஆனால் ஜப்பானில் கொரோனா பரவல் காரணமாக அந்நாட்டு பிரதமரின் இந்திய சுற்றுப்பயணம் தள்ளி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிலிப்பைன்ஸ் நாட்டு பயணத்தையும் ஒத்திவைத்துள்ளார்.