ஐரோப்பாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 120 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு ..!

More than 120 people have been killed and hundreds reported missing in floods in western Europe.

மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 120 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் மேற்கு ஐரோப்பாவில் பலத்த மழை மற்றும் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், உயிரிழப்பு மற்றும் காயங்களை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மோசமான வானிலை பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை கடுமையாக சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மன் மாநிலங்களில் அதிகரித்து வரும் நீர், நிலச்சரிவுகள் மற்றும் மின் தடைகளுக்கு மத்தியில் பெரிய அளவிலான மீட்பு நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றன. ஜெர்மனியில் ஏற்பட்ட வெள்ளத்தில் 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ரைன்லேண்ட்-பலட்டினேட் மாநிலத்தில், அஹ்ர்வீலர் மாவட்டத்தில், 1,300 பேர் கணக்கிடப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வெள்ளம்  காரணமாக, ரைன்லேண்ட்-பலட்டினேட் மற்றும்  நார்த் ரைன்-வெஸ்ட்பாலியாவில் தற்போது குறைந்தது 1,65,000 பேர் மின்சாரம் இல்லாமல் உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.