அதிர்ச்சி சம்பவம்: கொரோனா நோயாளியுடன் கழிவறையில் உடலுறவு வைத்து கொண்ட நர்ஸ்!

One of the nurses who worked on the ward treating the corona infection had sex with the corona patient, causing a stir.

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டில் பணிபுரிந்த செவிலியர் ஒருவர், கொரோனா நோயாளியுடன் உடலுறவு கொண்டுள்ளது,அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தோனேசியா நாட்டில் உள்ள ஜகார்த்தாவில் இருக்கும் விஸ்மா அட்லெட் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அந்தவகையில், அந்த மருத்துவமனையில் இருக்கும் கொரோனா வார்டில் பணியில் இருந்த செவிலியர் ஒருவர், கொரோனா நோயாளியுடன் கழிவறையில் உடலுறவு வைத்துக்கொண்டது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கொரோனா நோயாளி ஒருவர், சமூக வலைதளத்தில் பகிர்ந்த வீடியோ மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அந்த வீடியோவில், பணியில் ஈடுபட்டிருந்த செவிலியரின் கொரோனா பாதுகாப்பு உடை, கழிவறையின் கீழ் கிடந்துள்ளது. இந்த வீடியோ தற்பொழுது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில், அந்த செவிலியர் மருத்துவமனையிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் கொரோனா நோயாளி உடன் அவர் உடலுறவு கொண்டுள்ளதால், அவரும் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளதால், பாதுகாப்பு காரணமாக அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.