சிறைக்கைதிகள் மோதல்: 57 பேர் பலி !16 பேர் தலை வெட்டப்பட்டது !

பிரேசிலில் வடக்குப் பகுதியில் அல்தாமிரா நகரம் உள்ளது. அங்கு உள்ள ஒரு சிறையில் கட்டுமான பணி நடந்து வருவதால் லாரிகளில் கண்டெய்னர்களை கொண்டு செய்யப்பட்ட சிறையில்

பிரேசிலில் வடக்குப் பகுதியில் அல்தாமிரா நகரம் உள்ளது. அங்கு உள்ள ஒரு சிறையில் கட்டுமான பணி நடந்து வருவதால் லாரிகளில் கண்டெய்னர்களை கொண்டு செய்யப்பட்ட சிறையில் கைதிகளை தற்காலிகமாக அடைத்து வைத்துள்ளனர்.

unknown node

அந்த சிறையில் பயங்கரமான ரவுடிகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை  இரு கோஷ்டி கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு கோஷ்டி கைதிகள்  அடுத்து கோஷ்டி கைதிகள் அடைக்கப்பட்டிருந்த கண்டெய்னருக்கு  தீ வைத்தனர்.

இதனால் அப்பகுதியில் போலீஸ் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதிலிருந்து  இருந்து தப்பித்தவர்கள் அடுத்து பிரிவை சார்ந்தவர்கள் தலையை வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவத்தில் 16 பேர் தலை வெட்டி  கொலை செய்யப்பட்டனர்.

unknown node

இந்த சம்பவத்தில் இரு பிரிவை சார்ந்த  57 கைதிகள் இருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடந்து வருகிறது.