அம்மாடியோ ஒரு நாயை கவனிக்க ரூ.50 கோடியா.? உரிமையாளரின் பரந்த மனசு.!

The businessman in the United States has written off $ 5 million to take care of his pet dog.The businessman in the United States has written off $ 5 million to take care of his pet dog.

அமெரிக்காவில் தொழிலதிபர் தனது வளர்ப்பு நாயை கவனிப்பதற்காக 5 மில்லியன் டாலர்களை எழுதி வைத்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த டென்னிஸீ நகரில் உள்ள மிகப் பெரிய தொழிலதிபர் பில் டோரிஸ் .திருமணமாகாத இவர் பார்டர் கோலி என்ற இனத்தை சேர்ந்த நாய்க்குட்டியை வளர்த்து வருகிறார்.8 வயதான அந்த லுலு என்ற நாய்குட்டியை பராமரிப்பதற்காக நாயின் உரிமையாளர் 5 மில்லியன் டாலர்களை(இந்திய மதிப்பில் ரூபாய் 50கோடி) அறக்கட்டளை ஒன்றிற்கு எழுதி வைத்து விட்டு கடந்தாண்டு மரணமடைந்துள்ளார் .

இந்த நிலையில் தற்போது லுலுவை கவனிப்பதற்காக மார்த்தா பர்டன் அறக்கட்டளையிலிருந்து நியாமான தொகையை வாங்கியுள்ளார் .இது குறித்து ர்டன் கூறுகையில்,பில் டோரிஸ் லுலுவை நண்பரை போன்று மிகவும் நேசித்தார் என்று கூறி லுலுவுக்கு 5 மில்லியன் டாலர் செலவழிக்க முடியுமா என்று தனக்கு தெரியாது ,நான் செலவழிக்க முயற்சி செய்கிறேன் என்று சிரித்து கொண்டே பர்டன் கூறியுள்ளார்.