செவ்வாய் கிரகத்தில் செடி வளர்த்து சாதனை படைத்த விஞ்ஞானிகள்!

அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியமர்த்துவதற்கான

அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியமர்த்துவதற்கான முயற்சிகளிலும் தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், செக் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஜன் லுகாசெவிக் என்பவர், செவ்வாய் கிரகத்தில், உணவு மற்றும் மருந்து வகை தாவரங்களை வளர்ப்பது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டார். இவருடன் இணைந்து பராகுவே பல்கலைக்கழக வாழ்வியல் அறிவியல் துறையின் குழுவினரும் இணைந்து செயல்பட்டனர்.

unknown node

இவர்கள் செவவாய் கிரகத்தில் நிகழும் தட்பவெப்ப நிலையில் மண் இன்றி குறைந்த அளவு தண்ணீரில் தாவரங்களை வளர்த்தனர். அவர்கள் சமையலுக்கு தேவையான கடுகு, சாலட் இலைகள், முள்ளங்கிம் நறுமண செடிகள், புதினா மற்றும் மருத்துவக்குணங்கள் நிறைந்த தாவரங்களை பயிரிட்டனர்.இவர்களின் ஆய்வு வெற்றிபெற்றதையடுத்து, இவர்கள், பயிரிட்ட தாவரங்களில் இருந்து கடந்த வாரம் அறுவடை செய்தனர்.