பாம்புகளை பார்த்தாலே பதற்றமடையும் மனிதர்கள் மத்தியில் பாம்பை உடலில் ஊறவிட்டு எகிப்தில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் மசாஜ் வழங்கப்படுகிறது.
பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழமொழி, அதற்கு காரணம் பாம்பின் நச்சு தன்மை தான் சில பாம்புகள் கொத்திவிட்டால் உடனடியாக நிமிடங்களில் இறந்துவிடுவார்கள், அவ்வளவு நச்சு தன்மை கொண்ட பாம்புகள் உள்ளது. ஆனால், ஒரு சில வகை பாம்புகள் கொத்துவதால் என்ன, அவைகளை சாப்பிடவே செய்கிறார்கள். அது கூட பரவாயில்லை எகிப்தில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் வித விதமான பாம்புகளை முகத்திலும் உடலிலும் ஊறவைத்து மசாஜ் செய்கிறார்களாம்.
ஆம், கேட்கவே வியப்பாக இருக்கிறதா? மலைப்பாம்பு முதல் சாரைப்பாம்பு வரை உவழிகளும் டலில் ஊறவைத்து மசாஜ் செய்கிறார்கள். ஆனால், பயப்பட வேண்டாம் ஏனென்றால் விஷமற்ற பாம்புகளை மட்டுமே இந்த மசாஜுக்கு பயன்படுத்துகிறார்களாம். அதுவுமில்லாமல் இந்த மசாஜ் மிகவும் விலை மலிவு தான். இந்த மசாஜ் செய்துகொள்ளும் போது புத்துணர்ச்சி கிடைப்பது மட்டுமல்லாமல், உடல் வலிகளும் இல்லாமல் போய்விடுகிறதாம். இது குறித்த வீடியோ ஒன்று இணையதள பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
unknown node