மகனின் வாயில் சிகரெட்டை வைத்து AK-47 துப்பாக்கியை பயன்படுத்தி சுட்ட தந்தை…!

மகனின் வாயில் சிகரெட்டை வைத்து AK-47 துப்பாக்கியை பயன்படுத்தி தந்தை சிகரெட்டை நோக்கி சுட்டுள்ளார்.
ஈராக்கியர் ஒருவர் தனது துப்பாக்கி சுடும் திறமையை வெளிப்படுத்தும் வகையில் தனது மகனின் வாயில் வைத்திருந்த சிகரெட்டை ஏகே 47 மூலம் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், அந்த நபர் தனது மகனை வாயில் சிகரெட்டைப் பிடிக்கச் சொல்வதைக் காணலாம். பின்னர் அவர் சிகரெட்டை குறிவைத்து, சிகரெட்டை நோக்கி சுட்டார். அந்த நபர் சிகரெட்டை சுட்டுவிட்டு தனது துல்லியத்தை பற்றி பெருமையாக கூறினார். மனித உரிமைகளுக்கான ஈராக் கண்காணிப்பகம் இந்த சம்பவத்தை கவனத்தில் கொண்டது.
இதுகுறித்து இணையவாசிகள் தனது தகுதியை நிரூபிக்க ஒரு குழந்தையின் உயிரைப் பணயம் வைக்கிறார். நெட்டிசன்கள் கோபத்தை வெளிப்படுத்தியதுடன், அந்த நபரை நீதியின் முன் நிறுத்துமாறு கோரியுள்ளனர். ஆனால், அந்த நபர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!
June 22, 2025
“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!
June 22, 2025