ஈரானில் கொரோனா வைரசால் சீனாவிற்கு பிறகு அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக அமெரிக்கா , ஈரான் , இத்தாலி , ஸ்பெயின் போன்ற நாடுகள் உள்ளனர். இந்நிலையில் இதுவரையில் ஈரானில் 32,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 2,300 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் எவ்வளவு அதிவேகமாக பரவுகிறதே அதே போல கொரோனா குறித்து வதந்திகளும் சமூகவலை தளங்களில் பரவி வருகிறது.இந்நிலையில் சமூகவலை தளத்தில் மது குடித்தால் கொரோனா வராது என்ற வதந்தி செய்தியை நம்பி ஈரானில் ஏராளமான மக்கள் மெத்தனால் கலந்த எரிசாராயத்தைக் குடித்துள்ளனர்.
இதில் 5 வயதுள்ள குழந்தைக்கும் அவர்களின் பெற்றோர்கள் எரிசாராயத்தைக் குடிக்க கொடுத்துள்ளனர்.எரிசாராயத்தைக் குடித்ததில் 300 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.