27 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பிய தாய்லாந்து மன்னரின் மகன்..!

தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்னின் இரண்டாவது மூத்த மகனான வச்சரேசோர்ன் விவச்சரவோங்சே, 27 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தனது தாயகம் திரும்பியுள்ளார்.
நியூயார்க்கில் உள்ள ஒரு சட்ட நிறுவனத்தில் பணிபுரியும் வச்சரேசோர்ன், தனது தாயகம் வந்தவுடன் அரச குடும்பத்தால் ஆதரிக்கப்படும் ஆதரவற்ற குழந்தை பராமரிப்புக்கான அறக்கட்டளைக்குச் சென்று, அங்குள்ள அனைவரிடமும் நலம் விசாரித்தார்.
பிறகு, 2016ம் ஆண்டு இறந்த தனது தந்தை மற்றும் அவரது தாத்தா மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் ஆகியோரின் உருவப்படங்களுக்கு முன்னால், ஜீன்ஸ் மற்றும் சாதாரண கருப்பு சட்டை அணிந்து, புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இதன்பிறகு பாங்காக் அறக்கட்டளையில் செய்தியாளர்களிடம் பேசிய வச்சரேசோர்ன், 27 ஆண்டுகளாக தாய் நாட்டைவிட்டு வெளியே இருந்த நான், இப்போது திரும்பி வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன், மீண்டும் வருவது ஒரு கனவு போல இருக்கிறது என்று கூறியுள்ளார்.
வச்சரேசோர்ன் திரும்பியதைக் கண்டு பல தாய்லாந்து மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். இதற்கிடையில் மன்னரின் 44 வயதான மூத்தமகள், இளவரசி பஜ்ரகித்தியபா நரேந்திரா தேப்யவதி, கடுமையான இதய நோய் காரணமாக கோமா நிலையில் உள்ளார் என்பது குறிப்பித்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025