இப்படித்தான் கொரோனா வைரஸ் வெளி உலகுக்கு பரவியது...! எஃப்.பி.ஐ தலைவர் உறுதி.!

வுஹானில் நடந்த ஆய்வக சம்பவத்தில் இருந்து கோவிட்-19 உருவானது என்று எஃப்.பி.ஐ தலைவர் உறுதிபடுத்தியுள்ளார்.

வுஹானில் நடந்த ஆய்வக சம்பவத்தில் இருந்து கோவிட்-19 உருவானது என்று எஃப்.பி.ஐ தலைவர் உறுதிபடுத்தியுள்ளார்.

கொரோன பரவல் :

சீனாவின் வுஹானில் உள்ள ஆய்வகத்தில் நடந்த சம்பவத்தில் இருந்து கோவிட்-19 உருவானது என்று எஃப்.பி.ஐ தலைவர்கிறிஸ்டோபர் ரேஉறுதிபடுத்தியுள்ளார். முதன்முதலாக கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் பரவ தொடங்கியதையடுத்து உலக நாடுகள் முழுவதும் முடங்கும் அளவிற்கு ஆக்கிரமிக்கத் தொடங்கியது.

unknown node

[Image Source : Twitter]

கொரோனா கட்டுப்பாடு :

மார்ச் 2020 ஆம் ஆண்டு இந்த தொற்று பாதிப்பு தீவிரமாக பரவ தொடங்கிய நிலையில் கோடிக்கணக்கான மக்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேலும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடுகளிலும் அந்தந்த நாட்டு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பலருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் தற்பொழுது வரை நடைமுறையில் உள்ளது.

unknown node

[Representative Image]

எஃப்.பி.ஐ தலைவர் உறுதி :

இந்நிலையில் COVID-19 தொற்றுநோயின் தோற்றம் சீனாவின் வுஹானில் நடந்த ஆய்வக சம்பவத்திலிருந்து தோன்றியிருக்கலாம் என்று பணியகம் மதிப்பிட்டுள்ளது என்பதை எஃப்.பி.ஐ இயக்குனர் கிறிஸ்டோபர் ரே உறுதிப்படுத்தியுள்ளார்.

புதிய உளவுத்துறை மற்றும் அமெரிக்க எரிசக்தி துறை இணைந்து நடத்திய ஆய்வில் சீன ஆய்வகத்திலிருந்து தற்செயலான கசிவு கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு காரணமாக இருக்கலாம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது.

unknown node

உளவுத்துறை அறிக்கையும் மறுக்கும் சீனாவும் :

அமெரிக்காவின் 2021 உளவுத்துறை அறிக்கையின்படி, கொரோனா வைரஸ் நாவல் முதன்முதலில் சீனாவின் வுஹானில் நவம்பர் 2019 க்குப் பிறகு பரவியதாக தெரிவித்திருந்தது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) விசாரணைகளுக்கு வரம்புகளை விதித்துள்ள சீனா, அதன் ஆய்வகங்களில் ஒன்றிலிருந்து வைரஸ் கசிந்திருக்கலாம் என்பதை இதுவரை மறுத்துள்ளது,மேலும் வைரஸானது சீனாவுக்கு வெளியே தோன்றியதாக தெரிவித்து வருகிறது.

வுஹானில் பல ஆய்வகங்கள் உள்ளன, அவற்றில் பல 2002 இல் தொடங்கிய கடுமையான கடுமையான சுவாச நோய்க்குறி அல்லது SARS உடன் சீனாவின் அதிர்ச்சிகரமான அனுபவத்தின் விளைவாக கட்டப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது.