அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 2 ஆம் தேதியன்று உலக யுஎஃப்ஒ தினம் அனுசரிக்கப்படுகிறது.
உலக யுஎஃப்ஒ தினம் என்பது உலகெங்கிலும் உள்ள மக்கள் வானத்தை நோக்கி பார்க்கும்போது அடையாளம் காணப்படாத பறக்கும் பொருள்களைக் கவனிக்க ஏற்படுத்தும் விழிப்புணர்வு நாளாகும்.அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 2 ஆம் தேதியன்று உலக யுஎஃப்ஒ தினம் அனுசரிக்கப்படுகிறது.
யுஎஃப்ஒக்கள் பொதுவாக முற்றிலும் அடையாளம் காணப்படாத அல்லது அடையாளம் காணக்கூடிய முரண்பாடுகளாக வகைப்படுத்தப்படுகின்றன என்று உலக யுஎஃப்ஒ தினத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் கூறுகிறது.
உலக யுஎஃப்ஒ தினத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவம்:
1900 ஆம் ஆண்டுக்கு முன்னாள்,விமானி கென்னத் அர்னால்டின் கூற்றுப்படி, ஒன்பது அசாதாரண பொருள்கள் ஜூன் 24 ஆம் தேதியன்று வாஷிங்டனுக்கு மேலே பறந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் அவற்றை “சாஸர் போன்ற” அல்லது “ஒரு பெரிய பிளாட் டிஸ்க்” என்று கூறினார்.
unknown nodeபின்னர்,உலக யுஎஃப்ஒ தின அமைப்பு (வுஃபோடோ) பின்னர் ஜூலை 2 ஐ ஒரு நாள் கொண்டாட்டமாக அர்ப்பணித்தது.இதன் நோக்கம் யுஎஃப்ஒ பார்வைகள் குறித்த கோப்புகளை வகைப்படுத்த அரசாங்கத்தை ஊக்குவிப்பதும் ஆகும்.
நியூ மெக்ஸிகோவின் லிங்கன் கவுண்டியில் உள்ள வில்லியம் பிரேசல் என்பவர் தனது நிலத்தில் முதன்முதலில் பறக்கும் பொருள் ஒன்றை கண்டுபிடித்தார்.பின்னர்,அமெரிக்க இராணுவம் அதனை மீட்டது.
கவர்-அப் என்று அழைக்கப்படும் இது 1950 களில் மற்றும் இன்று வரை வேற்று கிரக சந்திப்புகளில் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு வழி வகுத்தது. இப்போது கூட, 70 ஆண்டுகளுக்கும் மேலாகியும், இந்த சம்பவம் ரோஸ்வெல்லின் அடையாளத்தின் வரையறுக்கப்பட்ட அம்சமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.