துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40,000-ஐ கடந்தது.
கடந்த வாரம் துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட மிகபெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால், இரு நாடுகளிலும், பல அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
unknown nodeஇந்த கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், உறவுகளையும், உடைமைகளையும் இழந்து பரிதாபமான சூழலுக்குள் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இருநாடுகளிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 40,000-ஐ கடந்துள்ளது.
துருக்கியில் 35,418 பேரும், சிரியாவில் 5,800 பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.