பாக்முட் அருகே ரஷ்ய சேமிப்பு தளத்தை உக்ரைன் அழிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போர் :
கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் தொடங்கியது. இந்த போரில் இரண்டு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். மேலும் பல சேதங்கள் ஏற்பட்டன. போர் தொடங்கி ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் ரஷ்யா உக்ரைன் மீதான போரை நிறுத்திக் கொள்ளுமாறு பல்வேறு நாடுகள் அறிவுறுத்தி வருகிறது.
ரஷ்ய சேமிப்பு தளம் :
இதையடுத்து பாக்முட் பகுதியில் பல மாதங்களாக போர் நடந்து வருகிறது இந்நிலையில் உக்ரேனியப் படைகள் பாக்முட் அருகே உள்ள ரஷ்ய சேமிப்பு தளத்தை அழித்ததைக் காட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த விடியோவை தி இன்டிபென்டன்ட் தனது யூடியூப்பில் பகிர்ந்துள்ளது. உப்பு சுரங்க நகரமான பாக்முட்டில் ரஷ்ய இராணுவமும், கூலிப்படையான வாக்னர் குழுவும் பல்லாயிரக்கணக்கான வீரர்களை இழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
unknown nodeவீடியோ கிரேடிட்ஸ் : The Independent