ஆளில்லா அணுசக்தி விமானம் மூலம் நீருக்கடியில் தாக்குதல்.! வடகொரியா சோதனை.!

நீருக்கடியில் தாக்குதல் நடத்தும் அணுசக்தி திறன் கொண்ட ஆளில்லா விமானத்தை வடகொரியா சோதனை செய்துள்ளது.

நீருக்கடியில் தாக்குதல் நடத்தும் அணுசக்தி திறன் கொண்ட ஆளில்லா விமானத்தை வடகொரியா சோதனை செய்துள்ளது.

கதிரியக்கத்தின் மூலம் பேரழிவை உருவாக்கக்கூடிய புதிய அணுசக்தி திறன் கொண்ட நீருக்கடியில் தாக்குதல் நடத்தும் ஆளில்லா விமானத்தை வட கொரியா சோதனை செய்துள்ளது. இந்த சோதனையின் போது, வட கொரியவின் புதிய ஆளில்லா விமானம் நீருக்கடியில் 260 முதல் 500 அடி (80-150 மீட்டர்) ஆழத்தில் 59 மணி நேரத்திற்கும் மேலாக பறந்து கிழக்கு கடற்கரையில் உள்ள கடலில் வெடித்துள்ளது.

இவ்வாறு நீருக்கடியில் வெடிப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் மிக பெரிய அளவிலான கதிரியக்க அலையை உருவாக்கி எதிரிகளின் கடற்பகுதியில் பதுங்கியிருந்து தாக்குதல்களை நடத்த முடியும். மேலும் இந்த திறனை வைத்து கடற்படை ஸ்டிரைக்கர் குழுக்கள் மற்றும் முக்கிய செயல்பாட்டு துறைமுகங்களை அழிக்க உதவும் வகையில் இந்த ட்ரோன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நீருக்கடியில் தாக்குதல் நடத்தும் ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தும் வரை கடற்கரை துறைமுகங்களில் நிறுத்தப்படலாம், பின்னர் தாக்குதல் நேரத்தில் ஒரு கப்பலால் தாக்குதல் நடத்தப்படும் இடத்திற்கு இழுத்துச் செல்லப்படும்.  இந்த சோதனையை தலைவர் கிம் ஜாங் உன் மேற்பார்வையிட்டார். மேலும் வட கொரியா தனது அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்கினால், சிறிய போர்க்கப்பல்களை முழுமையாக்குவதை முக்கிய இலக்காக கொண்டிருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.