வருங்காலத்தில் Disease X என்ற புதிய நோய் வருமா? – எச்சரிக்கும் விஞ்ஞானி

A scientist has revealed that the world could be affected by a new virus called Disease X in the future.Professor Jean-Jacques Muyembe Tamfum.

வருங்காலத்தில் ஒரு புதிய வைரஸ் Disease X என்று அழைக்கப்படும் வைரசால் உலகம் பாதிக்கப்படலாம் என விஞ்ஞானி ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக முழுவதும் பரவி மிக பெரிய இழப்பை ஏற்படுத்தியது. இதனால் பலரும் தங்களது அன்றாட வாழவை தொலைத்து, தவித்து வருகின்றனர். இந்த புது வருடம் 2021 கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழு நிவாரணம் கிடைக்கும் என நம்பிக்கையை தூண்டியுள்ளது. இருப்பினும், கொரோனா வைரஸின் முடிவு நம் அன்றாட வாழ்க்கையில் சவால்களை சேர்க்கும் நோய்களுக்கான முடிவாக இருக்காது.

இந்நிலையில், வருங்காலத்தில் ஒரு புதிய வைரஸ் Disease X என்று அழைக்கப்படும் வைரசால் உலகம் பாதிக்கப்படலாம் என எபோலா வைரஸை கண்டுபிடித்த பேராசிரியர் ஜூன்-ஜாக் முயெம்பே தம்பம் வெளிப்படுத்தியுள்ளார். டாக்டர், பேராசிரியர் ஜீன்-ஜாக் முயெம்பே தம்பம், 1976-இல் எபோலாவைக் கண்டுபிடிக்க உதவினார். இப்போது மனிதகுலம் அறியப்படாத புதிய வைரஸ்களை எதிர்கொள்கிறது என்று தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்காவின் வெப்பமண்டல மழைக் காடுகளில் இருந்து ஆபத்தான வைரஸ்கள் உருவாகின்றன என்று கூறியுள்ளார்.

எதிர்கால தொற்றுநோய்கள் COVID-19 ஐ விட மோசமாக இருக்கக்கூடும். கொரோனா வைரஸை போல வேகமாக பரவும், எபோலா வைரஸை போன்றும் ஆபத்தானது எனவும் தெரிவித்துள்ளார். காங்கோ ஜனநாயகக் குடியரசின் மருத்துவர்கள், ஒரு பெண்ணிடம் புதிய தொற்றை கண்டறிந்துள்ளனர். அவருக்கு ரத்தக்கசிவு காய்ச்சலின் ஆரம்ப அறிகுறிகளைக் சுட்டிக்காட்டுகிறார்கள். நோயாளி ஏற்கனவே எபோலோ வைரசுக்கு ஒரு பரிசோதனையை மேற்கொண்டார். இருப்பினும், அவர் Disease X இருக்கலாம் என மருத்துவர்கள் அஞ்சுகிறார்கள்.

இது முடிவுகள் எதிர்மறையாக வரும்போது எதிர்பாராதது என்று கூறப்படுகிறது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் (WHO) ஒரு அறிக்கையின்படி, Disease X என்பது கற்பனையானது. ஆனால், அது நிகழ்ந்தால் உலகம் முழுவதும் அழிக்க வழிவகுக்கும் என்று விஞ்ஞானிகள் அஞ்சுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தற்போது உலக முழுவதும் பேசப்பட்டு வருகிறது. வருங்காலத்தில் Disease X என்ற புதிய நோய் வருமா? என்று கேள்விகள் வைக்கப்பட்டு வருகின்றனர்.