பாண்டா கரடிகளை பரிமாற்றம் செய்துகொள்ளும் ஒப்பந்தம், மலேசியா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் என்னவென்றால், சீனாவிலிருந்து மலேசியாவுக்கு அனுப்பப்படும் பாண்டா கரடிகள் இனப்பெருக்கம் செய்து, குட்டிக்கு 2 வயதானதும் மீண்டும் சீனாவுக்கு அனுப்புவதே ஆகும். இதனையடுத்து, மலேசியாவில் பிறந்த பாண்டா கரடிக்கு யீ யீ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பாண்டா கரடிக்கு பெயர் சூட்டும் விழா கோலாம்பூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அந்நாட்டு […]
பாங்காக்கில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாடு நடைபெற்று வருகிறது. அம்மாநாட்டில், இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்கா சார்பில் பாம்பியோ ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த வேளையில் பாங்காக்கில் மூன்று நாட்டு வெடுகுண்டுகள் வெடித்துள்ளன. பாங்காங், சோங் ரயில் நிலையம் அருகில், மஹானா கோன் பகுதி கட்டிடம், மாடி ரயில்நிலையம் என மூன்று இடங்களில் நாட்டு வெடிகுண்டு வெடிக்கப்பட்டுள்ளன. இதில் அதிர்ஷ்டாவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை, இருப்பினும் இரண்டு துப்புரவு பணியாளர்கள் படுகாயமுற்று மருத்துவமனையில் உள்ளனர்.
பிரதமர் மோடி விரும்பினால் காஷ்மீர் பிரச்சினையில் தலையிட தயார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நீண்ட நாட்களாக இருந்து வரும் பிரச்சினை காஷ்மீர் பிரச்சினை ஆகும்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பிற்கு பின்னர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசுகையில்,காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யுமாறு இந்திய […]
இன்றைய இளம் தலைமுறையினர் அனைவருமே பாஸ்ட் போட உணவுகளை தான் விரும்பி உண்ணுகின்றனர். இதற்காக எவ்வளவு பணத்தை வேண்டுமென்றாலும் செலவு செய்கின்றனர். இந்நிலையில், மெக்சிகோவை சேர்ந்த சமையல் கலைஞர்கள் இணைந்து 72 மீட்டர் நீளமுள்ள சாண்ட்விச்சை தயார் செய்துள்ளனர். இந்த சான்ட்விச்சிற்காக ஆயிரம் பிரட் துண்டுகள், மயோனீஸ், தக்காளி, வெங்காயம், கோஸ் மற்றும் இறைச்சி துண்டுகளை பயன்படுத்தி இதனை தயாரித்துள்ளனர். இதற்க்கு முன்பதாக 38 மீட்டர் நீளம் கொண்ட சாண்ட் விச் தயாரிக்கப்பட்டதே சாதனையாக இருந்த நிலையில், […]
மனிதனாய் பிறந்த அனைவருமே ஆரோக்கியமான ஒரு குழந்தையாக பிறப்பிப்பதில்லை. 10% குழந்தைகள் அதில் குறைபாடுகளுடன் தான் பிறக்கின்றனர். அந்தவகையில், அமெரிக்காவை சேர்ந்த ஆஸ்டின் நகரை சேர்ந்த சிறுமி மடேலின். இவருக்கு வயது 8. இவர் பிறக்கும் போதே இடது கையில் குறைபாட்டுடன் பிறந்துள்ளார். இந்நிலையில், இந்த குழந்தைக்கு பயோனிக் வகை செயற்கை கைகளை பொருத்த முடிவு செய்த பெற்றோர், தற்போது அக்குழந்தைக்கு பயோனிக் வகை கைகளை பொருத்தப்பட்டுள்ளது. அந்த கையின் சிறப்பு அம்சம் என்னவென்றால், இந்த உணர்வுகள் […]
ஆப்கானிஸ்தானில் கந்தகார் – ஹிராத் நெடுஞ்சாலையில் தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் மீது அரசு பஸ் ஒன்று ஏறிச் சென்றது. அப்போது புதைத்து வைத்திருந்த அந்த வெடி குண்டு வெடித்ததில் அந்த பஸ் சிதறியது வெடித்து சிதறியது. இதில் பயணம் செய்த பெண்கள், குழந்தைகள் என 28 பேர் இறந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தவர்கள்.இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் […]
அஞ்சலி சக்ரா மற்றும் சுந்தாஸ் மாலிக் இருவரும் ஓரினச்சேர்க்கை திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் வைத்து இவர்களது திருமணத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள நிலையில், இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஓரின ஈர்ப்புடைய இந்த பெண்களுக்கு இடையே மறைந்திருக்கும் இன்னொரு ரகசியம் என்னவென்றால், அஞ்சலி சக்ரா என்பவர் இந்தியாவை சார்ந்த பெண். சுந்தாஸ் மாலிக் என்பவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண்ணாவார். மேலும் அஞ்சலி இந்து மதத்தை […]
கடந்த ஏப்ரல் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் பால்கான் 9 ராக்கெட்டில் ஏவப்பட்டது. அருகிலுள்ள குள்ள நட்சத்திரத்தை சுற்றிவரும் மூன்று புதிய கிரகங்களை கண்டறிந்துள்ளது, இது நமது சொந்த சூரியனை விட சிறியதாகவும் குளிராகவும் இருக்கிறது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையான நாசாவின் டெஸ் செயற்கைக் கோள் கண்டுபிடிக்கபட்டுள்ளது. புதிதாகக் காணப்படும் கிரகங்கள் அளவு மற்றும் வெப்பநிலையில் உள்ளன ஆனால் அவை அனைத்தும் பூமியை விடப் பெரியவை மற்றும் சராசரியாக அதிக வெப்பநிலையுடன் உள்ள குறைந்த முடிவில், TOI 270 […]
அமெரிக்காவை சேர்ந்த பிரபல யூடுபர் கிராண்ட் தாம்சன் மரணம். அமெரிக்காவை சேர்ந்த 38 வயதான கிராண்ட் தாம்சன் இவர் ” தி கிங் ஆஃப் ரேண்டம் ” என்ற யூடூப் சேனலை ஒன்றை நடத்தி வந்தார் . இந்த சேனலை 11 மில்லியன் அதாவது 1 கோடிக்கு அதிகமானோர் பின் தொடர்கிறார்கள். மிகவும் ஆபத்தான பரிசோதனைகளை செய்து காட்டுவதில் இவர்கள் சேனல் பிரபலம் .வாயு நைட்ரோஜனை தனது முகத்தில் செலுத்தி என்ன செய்கிறது என பாருங்கள் என்ற […]
உலகில் சிறந்த விமான சேவைக்கான விருதை சமீபத்தில் எமிரேட்ஸ் நிறுவனம் பெற்றது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று சமீபத்தில் மேகத்தை கிழித்தபடி தரை இறங்கியது. அந்த விமானம் மேகத்திலிருந்து வெளிவரும் காட்சி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியது. அந்த விமான காட்சியை எமிரேட்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது. The best airline in the world Emirates airline???? — mayda marashlian (@MMarashlian) August 1, 2019 இந்த […]
பிரேசிலில் வடக்குப் பகுதியில் அல்தாமிரா நகரம் உள்ளது. அங்கு உள்ள ஒரு சிறையில் கட்டுமான பணி நடந்து வருவதால் லாரிகளில் கண்டெய்னர்களை கொண்டு செய்யப்பட்ட சிறையில் கைதிகளை தற்காலிகமாக அடைத்து வைத்துள்ளனர். அந்த சிறையில் பயங்கரமான ரவுடிகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை இரு கோஷ்டி கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு கோஷ்டி கைதிகள் அடுத்து கோஷ்டி கைதிகள் அடைக்கப்பட்டிருந்த கண்டெய்னருக்கு தீ வைத்தனர். இதனால் அப்பகுதியில் போலீஸ் செல்ல முடியாத சூழ்நிலை […]
பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் இராணுவ தலைமையகம் உள்ளது. அதன் அருகே நேற்று முன்தினம் காலை சிறிய ரக விமானம் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென மொராகலூ கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் அந்த சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு விமானிகள் , 3 ராணுவ வீரர்கள் என 17 பேர் இறந்தனர். மேலும் 6 வீடுகள் எரிந்து சாம்பலானது. இந்த விபத்தில் காயமடைந்த 12 பேரும் அருகில் உள்ள […]
உலக அளவில்அனைவரும் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் வாட்சப் சேவை முதலிடத்தில் உள்ளது. நாள்தோறும் கோடிக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். பேஸ்புக் நிறுவனம் வாட்சப் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய பின்னர் பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தற்போது புதிதாக ஒரு வாட்சப் கணக்கை பல சாதனங்களில் பயன்படுத்தும் வகையில் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதன்படி multi – platform support என்ற வசதி மூலம் வாட்சப் பயன்படுத்தும் எண்ணுக்கு verification code எண் அனுப்பப்படும். அந்த […]
ரஷ்யாவை சார்ந்த எகெடெரினா கரக்லொனாவா என்ற பெண் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் புகழ் பெற்றவர்.இவர் இன்ஸ்டாகிராமில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களை வைத்து உள்ளார். எகெடெரினா இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருபவர். இவர் மாஸ்கோவில் உள்ள வாடகை வீட்டில் எகெடெரினா தங்கி உள்ளார். கடந்த சில நாள்களாக எகெடெரினா காணவில்லை என அவரது பெற்றோர்கள் பல இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை என்பதால் இது குறித்து காவல்நிலையத்தில் எகெடெரினா பெற்றோர்கள் புகார் கொடுத்தனர். இந்நிலையில் […]
தற்போது பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு அதிகரித்தாலும் உலகம் முழுவதும் பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் கார் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே பெருகி வருவதாலும் முன்னனி கார் தயாரிப்பு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஹூண்டாய் நிறுவனம் கோனா எனும் எலெக்ட்ரிக் காரை சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்தது. இந்நிலையில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை கனடா நாட்டின் மான்ட்ரியல் பகுதியை சேர்ந்த ஒருவர் கடந்த மார்ச் […]
கஜகஸ்தான் நாட்டின் காரகண்டா மாகாணத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.இவர்கள் அப்பகுதியில் ஒரு கல்லறையை தோண்டினர்.அதில் இரண்டு எலும்பு கூடுகள் இருந்தது. அந்த இரண்டு எலும்பு கூடுகளும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு புதைக்கப்பட்டு இருந்ததை பார்த்த ஆராய்ச்சியாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.இரண்டு எலும்பு கூடுகளுக்கு அருகில் ஏராளமான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருந்தது.மேலும் ஒரு எலும்பு கூடு அருகில் வளையல்கள் தங்க மோதிரங்கள் இருந்தது. நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் இறந்த 16,17 வயது உடையவர்களின் […]
ஒசாகா மாகாணத்தில் உள்ள குளிர்பானக் கடை ஒன்றில் இனிப்பு சோளத்துடன் கிரீமி பாப்கார்ன்களை தயாரித்துவருகின்றனர்.அந்த பாப்கார்ன் உடன் 200 டிகிரி செல்சியஸில் உள்ள திரவ நைட்ரஜனில் சேர்க்கப்படுகிறது. 200 டிகிரி திரவ நைட்ரஜனை சேர்க்கும் போது உறைந்த நிலைக்குமாறுகிறது. இதனை சாப்பிடும் போது குளிர்ச்சியாகவும் , நாக்கில் வைத்தவுடன் உருகிவிடுவதாகவும் வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். ஒரு கப் உறைந்த பாப்கான் இந்திய மதிப்பில் 350 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். நாளொன்றுக்கு 60 ஆயிரம் வரை பாப்கார்ன் விற்பனை […]
அமெரிக்காவின் பெனிசில்வேனியா பகுதியை சார்ந்த ஜியர்ஸ்டோர்ஃப் என்ற 16 வயது சிறுவன் .அமெரிக்காவில் நடைபெற்ற ஃபார்ட்நைட் ஆன்லைன் வீடியோ கேம்மில் கலந்து கொண்டார்.இந்த ஆன்லைன் வீடியோ கேம்மில் பல்வேறு நாட்டை சார்ந்த பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டி தொடக்கத்தில் இருந்து சிறப்பாக விளையாடிய ஜியர்ஸ்டோர்ஃப் அனைத்து சுற்றுகளின் முடிவில் 59 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் பிடித்தார்.இதனை தொடர்ந்து போட்டியில் முதல் பரிசான 3 மில்லியன் டாலரை தட்டி சென்றார்.இந்திய மதிப்பில் 20 கோடியே 68 லட்சம் […]
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள கில்ராய் பகுதியில் உணவு திருவிழா நடந்து வருகிறது.இந்த உணவு திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு வருகின்றனர். நேற்று உள்ளூர் நேரப்படி மாலை 05.30 மணிக்கு இராணுவ உடையணிந்து கையில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென மக்கள் மீது சரமாரியாக சூட தொடங்கினர். இதனால் மக்கள் அலறியடித்து ஓடினர்.இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 3 பேர் இறந்து உள்ளனர்.12-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைத்தனர்.தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் […]
அமெரிக்காவில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் மேசையில் சமைப்பதற்காக வைத்திருந்த சிக்கன் துண்டுகளில் இருந்து ஒரு சிக்கன் துண்டு மட்டும் தட்டிலிருந்து நகர்ந்து உருண்டு கீழே விழுந்தது. இந்த வீடியோ சமூக வலைகளில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை 19 லட்சம் பேர் முகநூலில் பார்த்துள்ளனர். 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்தவர்கள் கோழியின் தலையை வெட்டப்பட்டதால் அது நகர்ந்து என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.ப்ளோரிடாவில் இருந்து ஒருவர் தான் இந்த வீடியோவை […]