ஆம் ஆத்மி கட்சி 2022 ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்களின் மூன்றாவது பட்டியலை வெளியிட்டது.
அடுத்தாண்டு பஞ்சாப், கோவா, உத்தரப் பிரதேசம், மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பஞ்சாப் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக ஆளும் கட்சியாக உள்ளது. இதனால், பஞ்சாப் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைதக்க வைக்க காங்கிரஸ் உறுதியாக உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் 35.20% வாக்குகளுடன் காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மி கட்சி 38.83% வாக்குகள் பெரும் என கருத்து கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கான மூன்றாவது பட்டியலை ஆம் ஆத்மி கட்சியும் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 18 வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு முன் வெளியிடப்பட்ட 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலில் 30 வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node