மீண்டும் ராகுல் காந்தி தமிழகம் வருகை ! இன்று முதல் பிரச்சாரம்

Ahead of TNElections2021 Rahul Gandhi begins his TamilNadu outreach,began his campaign as soon as he landed in Coimbatore.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று மீண்டும் தமிழகம் வந்துள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ,அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகி வருகின்றன.தேர்தல் பிரச்சாரத்தை அதிமுக ,திமுக ,மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தொடங்கி உள்ளன.அந்த வகையில் தேசிய கட்சியான காங்கிரஸ் ராகுலின் தமிழ் வணக்கம் என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.அதன்படி பொங்கல் தினத்தன்று தமிழகம் வந்த ராகுல் காந்தி மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்றார்.

இந்நிலையில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார் ராகுல்காந்தி.இன்று முதல் 25-ஆம் தேதி வரை மீண்டும் தமிழகம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.ராகுல் காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க மாவட்ட காங்கிரஸ் அனைத்துவித ஏற்பாடுகளையும் செய்துள்ளது. அதே வேளையில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி ஈடுபடுகிறார்.