ரயில் நிலையங்களில் உள்ள விசாரணை மற்றும் உதவி மையங்களின் பெயர்களை “சஹ்யோக்” என்று மாற்ற ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளதற்கு, சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்.
இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில் உள்ள விசாரணை மற்றும் உதவி மையங்களின் பெயர்களை “சஹ்யோக்” என்று மாற்ற ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், ‘இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில் உள்ள விசாரணை மற்றும் உதவி மையங்களின் பெயர்களை “சஹ்யோக்” என்று மாற்ற ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்தி வெறியர்களால் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவை வன்மையாக கண்டிக்கிறேன். அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்தலையிட்டு உத்தரவை திரும்பப் பெற வேண்டுகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node