நெருங்கும் சட்டமன்றத் தேர்தல் – மாநில பொறுப்பாளர்களை நியமித்த மக்கள் நீதி மய்யம் கட்சி

With next year's assembly elections in Tamil Nadu looming, the Makkal Needhi Maiam party has appointed state officials.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,மக்கள் நீதி மய்யம் கட்சி மாநில பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,வரவிருக்கின்ற தமிழக சட்டமன்றத் தேர்தலை பெரும் உத்வேகத்துடன் வெற்றி என்கின்ற ஒற்றைக் குறிக்கோளுடன் பேரெழுச்சியுடன் நமது கட்சி சந்திக்கவுள்ளது.அதற்கு வலு சேர்க்கும் வகையில் கட்சியில் மாநில அளவில் புதிய பொறுப்புகளை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் நம் நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சி ரீதியான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் நீதி மய்யம் கட்சி மாநில பொறுப்பாளர்கள் நியமனம் :

மாநில சுற்றுச்சூழல் அணி செயலாளர் – பத்மப்ரியா,

மாநில பொறியாளர் அணி செயலாளர்- வைத்தீஸ்வரன்,

மாநில ஊடகம் மற்றும் செய்தி தொடர்பு செயலாளர்கள் – சையத் சயிஃப்புதீன், வினோத் நியமனம்

மாநில தலைமை நிலைய பரப்புரையாளர் செயலாளர் -அருணாச்சலம்

மாநில தலைமை நிலைய தரவுகள் மற்றும் ஆய்வு துணைச் செயலாளர்கள் -ரமேஷ்,சஜிஷ்

மாநில தரவுகள் மற்றும் ஆய்வுகள் துணைச் செயலாளர்கள் -சண்முகசுந்தரம்,சுந்தரம்

தலைமை நிலைய அலுவலக துணைச் செயலாளர் – பிரகாஷினி

மாநில மக்கள் தொடர்பாளர்- ராஜேந்திரன்

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.