பாரதியார் சிலையை திறந்து வைத்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி..!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் பாரதியார் சிலையை திறந்து வைத்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் பாரதியார் சிலையை திறந்து வைத்துள்ளார்.

தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். திமுக மற்றும் கூட்டணி கட்சிகள்  தேநீர் விருந்தில் பங்கேற்கமாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் பாரதியார் சிலையை திறந்து வைத்துள்ளார். இந்த சிலை  நிகழ்ச்சியில் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள்  கலந்துகொள்ளவில்லை. பாரதியார் சிலைக்கு கீழ் உள்ள கல்வெட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பெயர் இடம்பெற்றுள்ளது  குறிப்பிடத்தக்கது.