#BREAKING : ஏப்ரல் 16-ஆம் தேதி அதிமுக அவசர செயற்குழு கூட்டம்..!

ஏப்ரல் 16-ஆம் தேதி அதிமுக அவசர செயற்குழு கூட்டம் என அறிவிப்பு

ஏப்ரல் 16-ஆம் தேதி அதிமுக அவசர செயற்குழு கூட்டம் என அறிவிப்பு

அதிமுக செயற்குழு கூட்டம் ஏப்ரல் 7-ஆம் தேதி கூட உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  அறிக்கை வெளியிட்டிருந்தார்.  அதன்பின், வரும் 7-ஆம் தேதி நடக்கவிருந்த அதிமுக செயற்குழு கூட்டம்  செய்யப்படுவதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது ஏப்ரல் 16-ஆம் தேதி அதிமுக அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதிமுக அவசர செயற்குழு கூட்டம்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தல் குறித்தும்; கழகத்தில் உறுப்பினர்களை சேர்ப்பது சம்பந்தமாகவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அவசர செயற்குழு கூட்டம் வருகின்ற 16.4.2023 – ஞாயிற்றுக் கிழமை பகல் 1.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெறும்.

கழக செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

unknown node