நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மாற்றம்.!

Candidates for the 2 constituencies in which we will contest on behalf of the Tamil Party in the coming elections have been changed.

வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் சீமான் ஒரே மேடையில் அறிமுகம் செய்திருந்தார். இதில் 117 பெண்களும், 117 ஆண்டுகளும் இடம்பிடித்திருந்தன. இதனைத்தொடர்ந்து தற்போது ஒவ்வொரு தொகுதிகளுக்கும் சென்று வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை மேகொண்டு வருகிறார்.

இந்த நிலையில், வரும் சட்டப்பேரவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தற்போது மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி, துறைமுகம் தொகுதியில் அகமது பாசில் மற்றும் ஒட்டப்பிடாரம் தொகுதியில் மூ.வைகுண்டமாரி ஆகிய வேட்பாளர்கள் இந்த இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர் என அறிவித்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மாற்றம்.!